என் குருநாதர் காலமானார்
என் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளார் சுஜாதா அவர்கள் காலமான செய்தியை வருத்தத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அண்மையில் எனக்கு அவர் எழுதிய கடிதத்திலிருந்து - “55 is too early to retire. I suggest you get an extension. At 72 I am still working part time. Atleast give an opportunity for your wife to be alone for a few hours..”
நாலு வரிக் கடிததிலும் தெறிக்கும் இந்த நகைச்சுவை உணர்வு தான் சுஜாதா.
பழக இனியவர். பண்பாளர். என்னையும் எத்தனையோ கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் இலக்கியச் சிற்றிதழ் உலகிலிருந்து mass circulated பத்திரிகைகளுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். இப்படி 1981-ல் தொடங்கிய என் மரியாதை கலந்த நட்பு இன்று முடிவுக்கு வ்ரும் என்று நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. For me, he goes on for ever.