Sunday, May 15, 2005

ஆற்றூர் ரவிவர்மா, குஞ்ஞுண்ணி

மகாகவி குஞ்ஞிராமன் நாயர் நினைவு இலக்கிய விருது இந்த ஆண்டு கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா அவர்களைத் தேடியடைந்திருக்கிறது.

ஆற்றூர் ரவிவர்மயுடெ கவிதகள் - பாகம் ரெண்டு தொகுதிக்குக் கிடைத்த இவ்விருதுக்காக இன்று காலை தமிழக நண்பர்கள் சார்பில் அவரை வாழ்த்தியதில் மகிழ்வடைகிறேன்.

அவருடைய கவிதைகளின் முதல் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாஹித்ய அகாதமி விருது கிட்டியது.


ஊர்வலம் போகும்போது உறங்குகிறவனும்
உறக்கத்தில் ஊர்வலம் போகிறவனும்
ஒருபோலத் தான்.


(ஆற்றூர் ரவிவர்மா)

**********************

குஞ்šண்ணியின் குறுங்கவிதைகள்

மக்கள் கவியாக மலையாளத்தில் புகழப்படும் மூத்த கவிஞர் 'குஞ்šண்ணி மாஷ்' (குஞ்சுண்ணி வாத்தியார்).

ஒரு குழந்தைக் கவிஞராகவும் பிரபலமான இவரின் குறுங்கவிதைகள் சில -

நுருங்ஙு கவிதகள்
------------------

சிறகடிபோலும் கேள்ப்பிக்காதெ
பறக்கும் பட்சிக்கு
ஒரு சிறகு ஆகாசம்
மறு சிறகு ஏதென்னு அறியில்ல
அறியும்வரெ இக்கவித அபூர்ணம்.


சிறகடிப்பு கூட எழுப்பாமல்
பறக்கும் பறவைக்கு
ஒரு சிறகு வானம்
மறு சிறகு எதுவென்று தெரியவில்லை
அறியும்வரை இக்கவிதை பூர்த்தியாகாது.

***********************

பசுத் தொழுத்தில்ங்கல் பிறன்னு வீணதும்
மரக் குரிசிமேல் மரிச்சுயர்நதும்
வளரெ நன்னாயி, மனுஷ்ய புத்ரா, நீ
உயிர்த்தெண்ணீற்றதோ, பரம விட்டித்தம்.

பசுத் தொழுவத்தில் பிறந்ததும்
மரச் சிலுவையில் மரித்ததும்
மிக நன்று, மனுஷ்ய புத்ரனான யேசுவே. நீ
மறுபடி உயிர்த்தெழுந்தது முட்டாள்தனம்.


ஏசுவிலாணு என் விச்வாசம்
கீசயிலாணு என் ஆச்வாசம்.


என் நம்பிக்கை ஏசுவில்.
என் ஆறுதல் பணத்தில்.

***********************************

குருவாயூரூரேக்குள்ள
வழி வாயிச்சுக் கேள்க்கவே
என்னில் நின்னு என்னிலேக்குள்ள
தூரம் கண்டு அம்பரன்னு ஞான்.


குருவாயூர் போக வழி எது என்று
விசாரித்தேன். படித்துச் சொன்னபோது
என்னில் இருந்து எனக்குள்ள
தூரம் கண்டு மலைத்தேன்.

*************************8


ஒரு தீப்பெட்டிக் கொள்ளி தரூ
கூடு தரூ
ஒரு பீடி தரூ
விரலு தரூ
சுண்டு தரூ
ஞானொரு பீடி வலிச்சு ரஸிக்கட்டெ.

ஒரு தீக்குச்சி கொடு
தீப்பெட்டி கொடு
ஒரு பீடி கொடு
விரல் கொடு
உதடு கொடு
நான் ஒரு பீடி புகைத்து மகிழ்கிறேன்.

1 Comments:

At 11:25 pm, Blogger Mookku Sundar said...

//..குருவாயூர் போக வழி எது என்று
விசாரித்தேன். படித்துச் சொன்னபோது
என்னில் இருந்து எனக்குள்ள
தூரம் கண்டு மலைத்தேன் //

தனக்குப் படிப்பில்லை என வெளிப்படுத்தும் ஏக்கமோ..?? வாவ்..

 

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது